தக்காளி சாதம் (14)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

அரிசி - 2 கப்

தக்காளி - 4

பெரிய வெங்காயம் - ஒன்று

இஞ்சி பூண்டு விழுது - 20 கிராம்

பச்சை மிளகாய் - 3

பட்டை - சிறிது

ஏலக்காய் - சிறிது

கிராம்பு - சிறிது

கொத்தமல்லி - கொஞ்சம்

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் பொடி - 1/2 தேக்கரண்டி

தனியா பொடி - 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் அரிசியை வேக வைத்து வடித்து எடுத்து கொள்ள வேண்டும். தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவைகளைப் போட்டு சிவக்க வதக்கவும்.

அதன் பிறகு இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும். பிறகு நறுக்கின பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்

பிறகு மஞ்சள்பொடி, மிளகாய் பொடி, தனியா பொடி, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

பிறகு தக்காளி சேர்த்து குறைந்த தீயில் வேகும் வரை வதக்கவும். வெந்ததும் கொத்தமல்லி தூவி சாதத்தை அதில் கொட்டி நன்கு கிளறி விட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: