சிக்கன் பிரியாணி (22)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சீரக சம்பா அரிசி - 1/2 கிலோ

சிக்கன் - 1/2 கிலோ

முட்டை - 3

பெரிய வெங்காயம் - 3

தக்காளி - 2

சின்ன வெங்காயம் - 5

தேங்காய் - 1 தேக்கரண்டி

இஞ்சி - 1 அங்குல துண்டு

பூண்டு - 10 பல்

பச்சை மிளகாய் - 8

சோம்பு - 1/2 தேக்கரண்டி

கசகசா - 1/2 தேக்கரண்டி

தயிர் - 1 கப்

சிவப்பு கலர் கேசரி பவுடர் - 1 தேக்கரண்டி

பட்டை - சிறிது

கிராம்பு - 2

ஏலக்காய் - 2

பிரிஞ்சி இலை - சிறிது

புதினா - 1 கைப்பிடி

கொத்தமல்லி - 1 கைப்பிடி

எலுமிச்சம் பழம் - 1

முந்திரி - 8

பாதாம் - 5

எண்ணெய் - 4 தேக்கரண்டி

நெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

பூண்டு, இஞ்சியை அரைத்து வைக்கவும்.

சிக்கனை கழுவி சிறிது தயிர் சேர்த்து பிசறி வைக்கவும்.

பெரிய வெங்காயத்தையும், 4 பச்சை மிளகாயையும் நீளமாக நறுக்கி வைக்கவும்.

தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

சோம்பு, கசகசா, தேங்காய், சிறிய வெங்காயம், பாதி பட்டை, 1 கிராம்பு, 1 ஏலக்காய், பாதி கொத்தமல்லி, புதினா, 4 பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வைக்கவும்.

பெரிய பாத்திரத்தில் பாதி நெய், எண்ணெயை விட்டு காய்ந்தவுடன் மீதி பட்டை, கிராம்பு,ஏலக்காய்,பிரிஞ்சி இலை சேர்க்கவும்.

பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன், பச்சை மிளகாய், தக்காளி, மீதி கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.

சிறிது நேரம் வதக்கிய பின், அரைத்த மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

வதக்கியபின், சிக்கன் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும். முட்டை பொடிப்பொடியாக ஆனபின், தயிர் சேர்த்து கிளறவும்.

2 நிமிடம் கழித்து ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கும் போது, அரிசியை போட்டு மூடி வைக்கவும். அரிசி 3/4 பதம் வெந்தவுடன், கேசரி பவுடர், உப்பு சேர்த்து கிளறி மூடவும்.

5 நிமிடம் கழித்து நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், நெய், எலுமிச்சம் பழசாறு சேர்த்து கிளறி 10 நிமிடம் தம்மில் வைத்து இறக்கவும்.

குறிப்புகள்: