ம‌ட்ட‌ன் த‌ம் பிரியாணி (குக்க‌ர் முறை)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தரமான பாஸ்மதி அரிசி - அரை கிலோ

மட்டன் எலும்புடன் - 400 கிராம்

பழுத்த தக்காளி - நான்கு

வெங்காயம் - நான்கு

பச்சை மிளகாய் - நான்கு

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

உப்பு தூள் - 2 1/2 தேக்கரண்டி

தயிர் - கால் கப்

கொத்தமல்லி தழை - அரை கைப்பிடி

புதினா இலை - கால் கைப்பிடி

எண்ணெய் - அரை டம்ளர்

நெய் - இரண்டு தேக்கரண்டி

பட்டை - இரண்டு அங்குலம் அளவு ஒன்று

கிராம்பு - இரண்டு

ஏலக்காய் - இரண்டு

பிரிஞ்சி இலை - இரண்டு

ஷாஜீரா - அரை தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது - இரண்டு மேசைக்கரண்டி

பாதாம் - ஐந்து (அரைத்தது)

சஃப்ரான் - ஐந்து இதழ் (பாலில் ஊற வைத்தது)

செய்முறை:

அரிசியை களைந்து ஊற வைக்கவும். வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பாதாமை அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும். சஃப்ரானை ஒரு மேசைக்கரண்டி சூடான பாலில் கரைத்து வைக்கவும். மட்டனை சுத்தம் செய்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, ஏலம், பிரிஞ்சி இலை, ஷாஜீரா, கிராம்பு ஆகியவற்றை போடவும். லேசாக பொரிந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

வெங்காயம் நன்கு சுருங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதன் பிறகு சுத்தம் செய்து வைத்திருக்கும் மட்டன் மற்றும் பச்சை மிளகாயை போட்டு நன்கு வதக்கவும்.

குக்கரை மூடி தீயை மிதமாக வைத்து 5 நிமிடம் மட்டனை வேக விடவும்

இப்போது மட்டன் லேசாக வெந்து சுருண்டு இருக்கும். அதனுடன் தக்காளி, கொத்தமல்லி தழை மற்றும் புதினாவை சேர்த்து கிளறவும்.

தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறி விடவும். அதன் பின்னர் தயிர், பாதாம் விழுது, பாலுடன் கரைத்து வைத்திருக்கும் சஃப்ரான் ஆகியவற்றை சேர்த்து கிளறி விடவும்.

எல்லாவற்றையும் சேர்த்த பின்னர் நன்கு கிளறி விட்டு கொதிக்க விடவும். அப்படியே ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து வேக விடவும்.

பின்னர் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கிளறவும். தண்ணீர் சேர்த்து, பின்னர் ஒரு கொதி வந்ததும் களைந்து வைத்திருக்கும் அரிசியை சேர்க்கவும்.

அரிசியை சேர்த்து நன்கு கிளறி விட்டு கொதிக்க வைக்கவும்.

கொதித்ததும் குக்கரை மூடி வெய்ட் போட்டு தீயை மிதமாக வைத்து இரண்டு விசில் வரும் வரை வைத்திருந்து இறக்கவும்.

ஆவி அடங்கியதும் மூடியை திறந்து சாதத்தை பிரட்டி விட்டு உடனே வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி விடவும். அப்படியே விட்டால் கட்டி பிடித்து விடும்.

சுவையான மட்டன் பிரியாணி ரெடி.

குறிப்புகள்: