கெழுத்தி மீன் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கெழுத்தி மீன் துண்டுகள் - 6

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 2

புளி - எலுமிச்சை அளவு

பூண்டு - 5 பல்

வர மிளகாய் - 1

மஞ்சள் தூள் - 1/2 மேசைக்கரண்டி

மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி

தனியா தூள் - 1 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - 5 இதழ்

கடுகு - சிறிது

எண்ணெய் - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைக்க:

சீரகம் - 2 மேசைக்கரண்டி

மிளகு - 1 மேசைக்கரண்டி

சோம்பு - 1 1/2 மேசைக்கரண்டி

கொத்தமல்லி - 1 மேசைக்கரண்டி

வெந்தயம் - 1 மேசைக்கரண்டி

வரமிளகாய் - 2

பூண்டு - 5 பல்

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1

கறிவேப்பிலை - 5 இதழ்

செய்முறை:

வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மீன் துண்டுகளை புளித் தண்ணீரில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரை மணி நேரம் ஊற விடவும். வரமிளகாயை கிள்ளிக் கொள்ளவும். புளியை தனியே குழம்பிற்காக ஊற வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வறுத்து அரைக்க வேண்டியவற்றை போட்டு வறுத்து ஆறியதும் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகை வெடிக்க விட்டு முதலில் வரமிளகாயை போட்டு வறுத்து, பின் பூண்டு மற்றும் வெங்காயத்துடன் சிறிது உப்பு சேர்த்து நன்கு தாளித்துக் கொள்ளவும். பின் தக்காளியை சேர்த்து நன்கு குழையும்படி வதக்கவும்.

நன்கு ஒன்று சேர கிளறி, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தனியாத் தூளை சேர்த்து பச்சை வாசம் போகும்படி 3 நிமிடம் கொதிக்க விட்டு புளிக்கரைசலை ஊற்றவும்.

பின்னர் எடுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை போட்டு, தேவையான உப்பு சேர்த்து கிளறி மூடி வைக்கவும்.

எண்ணெய் பிரிந்து வரும் போது கறிவேப்பிலை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: