நெய் சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - நான்கு கப்

வெங்காயம் - இரண்டு

தக்காளி - ஒன்று (சிறியது)

தயிர் - கால் கப்

பச்சை பட்டாணி - கால் கப்

இஞ்சி பூண்டு விழுது - இரண்டு மேசைக்கரண்டி

மல்லி, புதினா - சிறிதளவு

பச்சைமிளகாய் - ஒன்று

பட்டை, கிராம்பு - தலா ஒன்று

ஏலக்காய் - மூன்று

உப்பு, நெய் - தேவையான அளவு

செய்முறை:

நெய் சாதம் செய்ய தேவையானவற்றை எடுத்து வைக்கவும். பாசுமதி அரிசியை தண்ணீரில் ஊற வைக்கவும்.

வெங்காயம், தக்காளி, மல்லி, புதினா ஆகியவற்றை நறுக்கி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி பட்டை

ஏலக்காய், கிராம்பு தாளித்து வெங்காயம், மல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கி தக்காளி சேர்த்து வதக்கவும்.

பின் பட்டாணி, பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

வதங்கியதும் தயிர் சேர்த்து கிளறி உப்பு சிறிது போடவும்.

தயிர் சேர்த்து கிளறிய பின்னர் ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் வீதம் ஊற்றி கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கொதித்ததும் ஊறிய அரிசியை நீரை வடித்து இதில் சேர்க்கவும். தீயை மிதமாக வைக்கவும்.

அரிசி பாதி வெந்து மேல் உள்ள தண்ணீர் வற்றி வரும் போது தீயை குறைத்து சிம்மில் வைத்து பேப்பரைக் கொண்டு மூடி 15 நிமிடம் தம்மில் விடவும்.

பதினைந்து நிமிடம் கழித்து சாதத்தை திறந்து கிளறி விடவும். சுடச்சுட நெய் சாதம் தயார்.

குறிப்புகள்:

கோழிக் குருமா, மட்டன் குழம்பு, மீன் குழம்பு ஆகியவற்றிற்கு பொருத்தமாக இருக்கும்.