பயிறு குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காராமணி - 1 கப்

பச்சை பயிறு - 1 கப்

தக்காளி - 2

இஞ்சி - 5 கிராம்

பூண்டு - 5 கிராம்

பச்சை மிளகாய் - 3

தேங்காய் - 1 கப்

அரைத்த பச்சரிசி - 1/2 கப்

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 10 கிராம்

தனியா - 20 கிராம்

கடுகு, சீரகம் - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இஞ்சி, பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய், தேங்காய் பொடியாக நறுக்கவும்.

தனியா'வை வறுத்து அரைக்கவும்.

காராமணி, பச்சை பயிறு வேக வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும்.

இதில் நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

இத்துடன் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து குழைய வதக்கவும்.

பின் பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து வதக்கவும்.

இத்துடன் வேக வைத்த பயிறு, அரைத்த தனியா, நைசாக அரைத்த பச்சரிசி, உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு (குழம்பு பதம்) இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: