பக்கோடா குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பக்கோடா செய்வதற்கு:

துவரம் பருப்பு - 4 தேக்கரண்டி

கடலை பருப்பு - 8 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 6

பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

உப்பு - தேவையான அளவு

பொரிக்க - ரீஃபைண்ட் ஆயில்

குழம்பு செய்வதற்கு:

பொரிக்கடலை - ஒரு மேசைக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 8

பச்சை மிளகாய் - 3

பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி

கசகசா - ஒரு தேக்கரண்டி

முந்திரிப் பருப்பு - 6 (அல்லது) 7

தக்காளி - 4

பெரிய வெங்காயம் - 3

தேங்காய்ப்பூ - 1 1/2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

ரீஃபைண்ட் ஆயில் - 1 மேசைக்கரண்டி

கிராம்பு - 1

பட்டை - சிறிய துண்டு

ஏலக்காய்ப் பொடி - 1/4 தேக்கரண்டி

பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை, பச்சை கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:

பெரிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி முந்திரிப் பருப்பு, பெருஞ்சீரகம், பொரிக்கடலை, கசகசா, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் மற்றும் தேங்காய்ப்பூ ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.

வதங்கியுடன் பெரிய வெங்காயம் ம்ற்றும் தக்காளியைப் போட்டு குழைய வதக்கி எடுத்து ஆறவைக்கவும்.

நன்றாக ஆறியதும் உப்புச் சேர்த்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருஞ்சீரகம், கிராம்பு, பட்டை, ஏலக்காய்ப் பொடி தாளித்து, அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து மிதமான தீயில் நன்றாக வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குழம்பு பதத்தில் கொதிக்கவிட்டு இறக்கி வைக்கவும்.

கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, பெருஞ்சீரகம், இஞ்சி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும். (ஹாட் பேக்கில் வெந்நீர் ஊற்றி ஊற வைத்தால் அரை மணி நேரம் ஊற வைத்தால் போதும்.) பிறகு தண்ணீரை வடித்துவிட்டு உப்புச் சேர்த்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

பொரித்த பக்கோடாக்களை குழம்பில் போட்டு பச்சை கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்:

சாதம், பிரியாணி, சப்பாத்தி என்று எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கும்.