சுரைக்காய் தட்டப்பயிறு (காராமணி) குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிறிய சுரைக்காய் - 1

தட்டப்பயிறு (காராமணி) - 200 கிராம்

சின்ன வெங்காயம் - 200 கிராம்

தேங்காய் துருவல் - 1/2 மூடி

கசகசா - 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 8

பூண்டு - 4 பல்

சீரகம் - 1/2 தேக்கரண்டி

தனியா தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

புளி - ஒரு பெரிய எழுமிச்சம் பழ அளவு

கறிவேப்பிலை - சிறிது

கடுகு - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சுரைக்காயை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

தட்டப்பயிறை லேசாக வறுத்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். (முந்தின இரவே கூட ஊற வைக்கலாம்).

ஊற வைத்த தட்டப்பயிறை ஒன்றரை டம்ளர் சேர்த்து, குக்கரில் 6 விசில் விட்டு, பயிர் வெடிக்கும் வரை வேக வைக்கவும்.

புளியை 1 டம்ளரில் ஊற வைத்து, கரைத்து வடி கட்டவும்.

வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிளகாய், சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

ஆறிய பின், தேங்காய், கசகசா, தனியா தூள் சேர்த்து, நைசாக அரைக்கவும்.

வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய சுரைக்காய், சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

சுரைக்காய் வதங்கிய பின், அரைத்த மசாலாவை கரைத்து ஊற்றி, உப்பு,மஞ்சள் தூள் போட்டு, வேக விடவும்.

சுரைக்காய் வெந்தவுடன், கரைத்த புளி, வேக வைத்த பயிறு சேர்த்து, 5 நிமிடம் கொதித்த பின் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: