கார குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சாம்பார் பொடி - 2 ஸ்பூன்

புளி - 1 கோலியளவு (கரைத்துக் கொள்ளவும்)

பொடிதாக நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்

பொடிதாக நறுக்கிய தக்காளி - 1

கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

வெந்தயப் பொடி - 1/2 தேக்கரண்டி

பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 இனுக்கு

துருவிய தேங்காய் - 3 தேக்கரண்டி

சீரகம், மிளகு - 1 1/2 தேக்கரண்டி

எண்ணைய் - 1 தேக்கரண்டி

நல்லெண்ணைய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேங்காய், சீரகம், மிளகை நைசாக அரைக்கவும்.

வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெந்தயப்பொடி, பெருங்காயம் போட்டு கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு ஒரு வதக்கு வதக்கி பின் தக்காளி போடவும்.

நன்கு வதக்கி பேஸ்ட் போல ஆனதும் சாம்பார் பொடி, உப்பு 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

நன்கு கொதிக்கும் போது கரைத்த புளி ,நல்லெண்ணையில் பாதி ஊற்றவும்.

பின் அரைத்த விழுதை போட்டு மீதி உள்ள எண்ணையை ஊற்றி குழம்பை சிம்மில் வைத்து பாதி வற்றி கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: