காஞ்சிபுரம் இட்லி (8)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 1 கப்

பச்சரிசி - 1 கப்

உளுந்து - 1 கப்

சுக்கு பொடி - 1 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க:

எண்ணெய் அல்லது நெய் - 2 மேசைக்கரண்டி

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

உளுந்து - 1 தேக்கரண்டி

கடலை பருப்பு - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 1

கறிவேப்பிலை - 2 கொத்து

முந்திரி - கொஞ்சம்

செய்முறை:

அரிசி, உளுந்து அனைத்தையும் கழுவி ஊற வைக்கவும்.

இவற்றை தனித் தனியாக சற்று கொர கொரப்பாக அரைத்து உப்பு, சுக்கு தூள் கலந்து இரவு முழுவதும் புளிக்க விடவும்.

மாவு புளித்ததும் கடாயில் எண்ணெய் அல்லது நெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, ஒன்று இரண்டாக பொடித்த மிளகு சேர்த்து தாளித்து பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி எடுக்கவும்.

இதை மாவுடன் நன்றாக கலந்து விடவும். தேவை என்றால் சோடா மாவும் சிறிது கலந்து கொள்ளவும்.

முந்திரியை நெய்யில் வறுத்து எடுத்து இட்லி ஊற்ற போகும் தட்டிலோ, கப்பிலோ எண்ணெய் தடவி அதன் நடுவே ஒவ்வொரு முந்திரி வைக்கவும்.

இட்லி பாத்திரத்தில் நீரை வைத்து கொதிக்க ஆரம்பித்ததும் கப்பில் மாவை நிரப்பி இட்லி பாத்திரத்தில் வைக்கவும்.

10 அல்லது 15 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். சுவையான மணமான காஞ்சிபுரம் இட்லி தயார்.

குறிப்புகள்:

தேங்காய் சட்னி, கார சட்னி, புதினா சட்னி போன்றவையோடு அருமையாக இருக்கும்.