பின்னல் சமோசா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 1/4 கிலோ

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ

பச்சைபட்டாணி - 100 கிராம்

துருவிய காரட் - 2 கப்

நறுக்கிய பெரிய வெங்காயம் - 1 கப்

இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

பச்சைமிளகாய் - 3

காரப்பொடி - 1/2 தேக்கரண்டி

கொத்தமல்லி - 1/4 கட்டு

நறுக்கிய தக்காளி - 1/2 கப்

எண்ணெய் - 1/2 லிட்டர்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உப்பை தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்,மைதாமாவில் அந்த தண்ணீரை விட்டு கெட்டியாக பிசைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.

உருளைக்கிழங்கையும் பச்சைபட்டாணியையும் வேகவைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு நன்கு வதக்கவும்.

தக்காளி, வேக வைத்த காய்கறிகள், மற்றும் நறுக்கிய கேரட், தேவையான அளவு உப்பு போட்டு, நன்கு கிளறவும்.

இறக்கும் முன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கி அதனுடன் நறுக்கிய பச்சை கொத்தமல்லி தூவி இறக்கி ஆற வைக்கவும்.

பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறிய அப்பளமாக போட்டு அதன் உள்ளே பூரணத்தை வைத்து இரண்டு ஒரங்களிலும்,சிறிது கீறிவிடவும்.

அதன் ஒரங்களில் தண்ணீர் சிறிது தடவி இரண்டு பக்கங்களையும் ஒன்றன் மேல் ஒன்று போட்டு நன்றாக அழுத்தி மூடவும்.

பின்னல் போலவே அழகாக இருக்கும். எல்லாவற்றையும் இது போலவே செய்து கொள்ளவும்.

வானலியில் எண்ணெய்யை ஊற்றி நன்றாக காய்ந்ததும் சமோசாவை அதில் போட்டு நன்கு சிவந்து வரும் போது எடுத்து தட்டில் வைத்து பரிமாறவும்.

குறிப்புகள்: