மட்டன் சொதி மற்றும் வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/4 கிலோ

இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி

மிளகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

சோம்பு - 2 தேக்கரண்டி

மல்லி - 2 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - 8

பச்சைமிளகாய் - 2

புளி - ஒரு நெல்லிக்காயளவு

தேங்காய் - ஒரு மூடி

பட்டை - ஒரு துண்டு

கிராம்பு - 2

எலுமிச்சம்பழம் - ஒரு மூடி

கறிவேப்பிலை - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு குக்கரில் மட்டனை போடவும். இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்பொடி சேர்க்கவும். 3 கப் தண்ணீர் சேர்க்கவும். 6 விசில் வந்ததும் அடுப்பை நிறுத்தவும்.

குக்கர் ஆறியதும் மட்டன் தனியாகவும் வேக வைத்த தண்ணீர் தனியாகவும் பிரிக்கவும்.

சொதி செய்வதற்கு மட்டன் வேக வைத்த தண்ணீர் மட்டும்தான் தேவை.

தேங்காயை துருவி முதல் பால் ஒரு கப் எடுக்கவும். இரண்டாவது பால் 3 கப் எடுக்கவும்.

வெங்காயம், பச்சைமிளகாயை நீளமாக நறுக்கவும்.

மிளகு, சீரகம், சோம்பு, மல்லி இவற்றை சேர்த்து அரைக்கவும். கறி வேக வைத்த தண்ணீர், இரண்டாவது தேங்காய் பால், அரைத்து வைத்திருக்கும் மசாலா ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.

எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, அரை தேக்கரண்டி சோம்பு தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

கலந்து வைத்திருக்கும் சொதியை ஊற்றவும். புளியை உருண்டையாக உருட்டி சொதியில் போடவும். (புளியை கரைக்கக்கூடாது) அதில் உப்பு சேர்க்கவும். 15 நிமிடம் கொதிக்கவிடவும்.

இப்போது அடுப்பை நிறுத்தி சொதியை கீழே இறக்கவும். முதல் தேங்காய்பாலை சொதியில் சேர்க்கவும். ஆறியதும் எலுமிச்சம்பழம் பிழியவும்.

கறி வறுவல்:

மிளகு அரை தேக்கரண்டி, சீரகம் அரை தேக்கரண்டி, சோம்பு ஒரு தேக்கரண்டி சேர்த்து அரைக்கவும். ஒரு பெரிய வெங்காயம், ஒரு தக்காளி நறுக்கி வதக்கவும்.

தனியாக எடுத்து வைத்திருக்கும் கறியை போடவும். அரைத்த மசாலாவை போட்டு நன்றாக சுருள வறுத்து எடுக்கவும்.

குறிப்புகள்: